Visit blogadda.com to discover Indian blogs Sukumar's Page: என் காதல் 10

Pages

Friday, September 14, 2012

என் காதல் 10

நெருங்கிவிட்டாள் அவள் என்னை
பகிர்ந்தாள் அன்பினை தன்னை
அன்பிலே அவள் அன்னை
ஆட்கொண்டாள்  முழுதாய் என்னை

பேருந்தில் ஏறினோம்
பெருமூச்சு விட்டோம்
பயண சீட்டு பெற்றோம்
பயணம் தொடங்கினோம்

கோயம்பேடு முதல் கானத்தூர் வரை
காதோடு காதாக சிலாகித்தோம்
கடும் வெயில் என்றதையும் மறந்தோம்
கானத்தூர் சென்றடைந்தோம்

சிங்க கர்ஜனை பார்க்க தயாரானோம்
சிணுங்கள் குலுங்கலுடன் சுற்றி வந்தோம்
சிங்கம் திரியாரங்கினுள் நுழைந்தோம்
சிரிப்பு வெள்ளத்தில் தவழ்ந்தோம்

எங்கள் ஜோடியை பார்த்து பலர்
எடுத்த கண் வாங்காமல் பார்த்தனர்
எவ்வளவு கண் வைக்கமுடியுமோ வைத்தனர்
எங்களுக்கு அது பொருட்டில்லை என்பதை உணராதிருந்தனர்

சூர்யா அனுஷ்க ஜோடி பொறுத்தமா - இல்லை
சூர்யா ஜ்யோதிகா ஜோடி பொறுத்தமா  - இல்லை
எங்க ஜோடி பொறுத்தமா - இவ்வளவு கேள்விகள்
எங்களுக்குள் - இப்படி தான் தொன்றும காதலித்தால்?

கானத்துரிலிருந்து திரும்பினோம்
ஈஞ்சம்பாக்கம் சென்றோம்
சாய் நாதனை தரிசித்தோம்
சகலமும் நலமாய் முடிய வேண்டினோம்

மனதுள் எதோ தெரிய நிம்மதி
மங்கை அவள் கண்களில் முழுமதி
மனாளனின் கை கோர்த்த வெகுமதி
மனங்களால் ஒன்று சேர்வோம் நங்கள் என்பது விதி

வாடிக்கை போல உள்ளது
வருத்தமெல்லாம் தீர்ந்தது - மதி
வாகை சூட வந்தது - அவளின்
வருகையில் பூரிப்படைந்தது

மாலை வீடு திரும்ப வேண்டும்
மீண்டும் தற்காலிகமாய் பிரியவேண்டும்
மனதால் ஒன்று பட்டாலும்
மனதில் வேதனை விலகாது போலும்

வழி அனுப்பி வைத்தேன் அவளை
என் மனதில் ஆரம்பித்தது பெரும் ரகளை
இந்த பிரிவு வாட்டி எடுக்குது எங்களை
பரிமாறிக்கொண்டோம் அளவற்ற காதலை

அவள் கெளம்பும் வரை கண்கொட்டாமல் பார்த்தேன்
அவளும் என்னை அவ்வாறே நோக்கினாள்
இனம் புரிய வேதனையில் எங்கள் உள்ளங்கள்
காதலர்களுக்கு இவையெல்லாம் அன்றாட வரும் இன்னல்கள்

வீடு திரும்ப வேண்டும்
பேருந்தில் ஏற வேண்டும்
ஏனோ தெரியா வெற்றிடம்
எனக்கு எங்கே புகலிடம்

அவளிடம் அலைபேசியில் பேசினேன்
அபரிமித ஜக்கிரிதை வேண்டுமென்றேன்
அவளின் விம்மல் கேட்டு அலறினேன்
அவளின் கண்ணீர் துடைக்க எண்ணினேன்

மொக்கையாய் பேசினேன்
மெல்ல சிரிக்க கண்டேன்
மெதுவாய்  எடுத்து சொன்னேன்
மெல்ல நானும் கெளம்பினேன்

நண்பர்களின் காலாய்ப்பு
வந்தது அவர்கள் மேல் வெறுப்பு 
அவள் கண்களின் ஈர்ப்பு
அவள் என்றுமே எனக்கு இனிப்பு 

================================== தொடரும்



No comments:

Post a Comment